Temple Photography


 "வைகுண்ட ஏகாதசி"

உலகெலாம் படைத்தது காத்து உய்விக்கவந்த பெருமாளுக்கு மனிதர்கள் செய்யும் கைமாறு ஸ்வாமிக்கு நித்ய அனுஷ்டனங்களுடன் சிறப்பாக வைபவங்களை செய்வதும் தான்
அப்படிப்பட்ட வைபவங்களுள் முக்கியமானது "வைகுண்டஏகாதசி"
பெருமாளுக்கு உகந்த 108 திவ்யதேசங்களுள் முதன்மையானது ஸ்ரீரங்கம், 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஷேத்ரம்,
எத்தனையோ மொகலாய கொள்ளையர்களிடமிருந்து மீண்டும் இன்றும் நமக்கு அருள்பாலிக்கும் பெருமாள் ஷேத்ரம்,
12000 க்கும் மேற்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் உயிரை மொகலாயர்களில் வாளுக்கு பலியிட்டு காத்த கோயில் ஸ்ரீரங்கம்
ஆணுக்கு பெண் சளித்தவர் இல்லை என்பதை மெய்பிக்கும் வகையில் மொகலாய கொடுங்கோலர்களிடமிருந்து கோயிலை காக்க தன்னுயிரை துச்சமென நினைத்து அதே சமயம் அந்த மொலாய கொள்ளையனை விழ்த்த திட்டமிட்டு கொபுரத்திலிருந்து தள்ளிவிட்டு கொன்று, தன்னுயிரையும் மானத்தையும் காக்க தானும் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டு வீழ புகழ் பெற்ற வெள்ளையம்மாளையும்
அந்த மாமங்கையின் பெயரால் இன்றும் பெருமையோடு நிற்கும் வெள்ளைகோபுரத்தையும் காண கண் கோடி வேண்டும்
விபிஷணனிடமிருந்து பெற்று பாரதநாட்டிலேயே இருந்த நம்மை உய்விக்கவேண்டுமென்ற தேவர்களின் கோரிக்கையை ஏற்று விநாயகரின் திருவிளையாடலால் பள்ளிகொண்ட பெருமாளாக வீற்றிருக்கும் பெருமாள் ஸ்ரீரங்க பெருமாள்,
இப்படி பல்வேறு பெருமைகளுடைய ஸ்ரீரங்கநாதரின் ஏகாதசி உற்சவம் துவங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறஉள்ளது,
பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வந்து ரங்க கண்டு பாடி மகிழ்ந்து உய்ய வேண்டிக்கொள்கிறேன்,
May be an image of sky, palm trees and text
n Rajaratnam,
Comment
Share

Comments

Popular posts from this blog

Brahmin Photography

Maternity Photography

Indian Dance BharathaNatyam